"கொஞ்ச
நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப்
பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப்
பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து
அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக்
குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம்
நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100
தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து
வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம்.
ஆம்,
அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்;
தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி
கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்." என்று கூறி வேதனைப் பட்டிருந்தார்.
இது அன்று நடந்தது.
இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா?
சென்னை
வேலம்மாள் பள்ளியில் மழை வெள்ள நிவாரணம் குறித்து நடைபெற்ற
ஓவியக்கண்காட்சியில், அக்ஷரா ஸ்ருதி எனும் குழந்தை வரைந்த ஓவியம்தான் இது.
காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!
Excellent...
ReplyDelete